செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

எர்ணாகுளம்-ராமேசுவரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

Published On 2020-01-02 07:36 GMT   |   Update On 2020-01-02 07:36 GMT
மதுரை, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்- ராமேசுவரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மதுரை:

மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளம்- ராமேசுவரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06045) அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது வருகிற 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும்.

இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து அன்றைய நாட்களில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு ராமேசுவரம் செல்லும்.

இது ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கொல்லங் கோடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு அதிகாலை 3.40 மணிக்கு வரும். அதன் பிறகு மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம் வழியாக காலை 7.35 மணிக்கு ராமேசுவரம் செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News