செய்திகள்
மரக்காணம் அருகே பா.ம.க. பிரமுகர் கார் உடைப்பு- போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நிலத்தகராறில் பா.ம.க. பிரமுகர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்பேர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி (வயது 40). பா.ம.க. பிரமுகர். இவருக்கும் ஓமிப்பேர் பஜனைகோவில் தெருவை சேர்ந்த ராமராஜன் (35) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமராஜன் வேலி அமைத்தார். இதை அறிந்த சபாபதி தனது ஆதரவாளர்களுடன் சென்று அங்கிருந்த வேலியை அப்புறப்படுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமராஜன் அவரது உறவினர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு சபாபதி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் சபாபதியின் வீட்டின்முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். இந்த சத்தம் கேட்டு சபாபதியின் மனைவி வீட்டில் இருந்து வெளியே வந்தார். எதற்காக எங்கள் வீட்டின் முன்பு நின்று திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு ராமராஜன் உனது கணவர் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் தனது கணவர் வெளியூர் சென்றிருப்பதாகவும், இங்கிருந்து செல்லும்படியும் கூறினார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராமராஜன் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரும் சேர்ந்து சபாபதியின் வீட்டின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சபாபதியின் காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் சபாபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்பேர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி (வயது 40). பா.ம.க. பிரமுகர். இவருக்கும் ஓமிப்பேர் பஜனைகோவில் தெருவை சேர்ந்த ராமராஜன் (35) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமராஜன் வேலி அமைத்தார். இதை அறிந்த சபாபதி தனது ஆதரவாளர்களுடன் சென்று அங்கிருந்த வேலியை அப்புறப்படுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமராஜன் அவரது உறவினர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு சபாபதி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் சபாபதியின் வீட்டின்முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். இந்த சத்தம் கேட்டு சபாபதியின் மனைவி வீட்டில் இருந்து வெளியே வந்தார். எதற்காக எங்கள் வீட்டின் முன்பு நின்று திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு ராமராஜன் உனது கணவர் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் தனது கணவர் வெளியூர் சென்றிருப்பதாகவும், இங்கிருந்து செல்லும்படியும் கூறினார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராமராஜன் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரும் சேர்ந்து சபாபதியின் வீட்டின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சபாபதியின் காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் சபாபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.