செய்திகள்
கோப்புப்படம்

சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணும் பணி தாமதம்

Published On 2020-01-02 04:28 GMT   |   Update On 2020-01-02 04:28 GMT
அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த மையத்திற்கான சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணும் பணி அரை மணி நேரம் தாமதமானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு பெட்டிகள் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணும் பணிக்காக காலையில் ஆர்.டி.ஓ. செல்லப்பா, தேர்தல் அதிகாரிகள் காமேஸ்வரி, நாகமுத்து, லூர்துபிரபு ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தனர்.

அப்போது அந்த மையத்திற்கான சாவியை காணவில்லை. மாற்று சாவி பயன்படுத்தியும் திறக்க முடியவில்ரை. இதையடுத்து அதிகாரிகள் உத்தரவின்பேரில் சுத்தியல் மூலம் பூட்டு உடைக்கப்பட்டது. இதன் காரணமாக அரை மணிநேரம் வாக்கு எண்ணும் பணி தாமதமானது.
Tags:    

Similar News