செய்திகள்
தற்கொலை

புதுவையில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-12-18 10:22 GMT   |   Update On 2019-12-18 10:22 GMT
புதுவையில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை மொளப்பாக்கம் தெற்குதெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது54). இவரது மனைவி மகாலட்சுமி (45) இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜேஷ், மோகன்ராஜ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ராஜேஸ்வரிக்கு திருமணமாகி ரெட்டிச்சாவடியில் கணவனுடன் வசித்து வந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ராஜேஸ்வரிக்கு ஆபரே‌ஷன் நடந்தது.

ஆனால் ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வலி தாங்கமுடியாமல் மனவேதனையடைந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் குளியலறையில் இரும்பு கம்பியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கினார்.

இதனையறிந்து ராஜேஸ்வரியின் தம்பி மோகன்ராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குளியல் அறையில் ராஜேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்டு மோகன்ராஜ் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் ஓடிவந்து ராஜேஸ்வரியை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் மோகன்ராஜ் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News