செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2019-12-16 09:16 GMT   |   Update On 2019-12-16 09:16 GMT
பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு பருவ மழை கைகொடுத்ததால் 2 மாதத்துக்கும் மேலாக முறை நீர் பாசனம் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று வரை 810 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதுரை மாநகர குடிநீர் மற்றும் 5 மாவட்ட பாசன வசதிக்காக 2640 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1219 கன அடி நீர் வருகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 68.89 அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127.70 அடியாக உள்ளது. 1005 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. வருகிற 90 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.44 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 78 கன அடி. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News