search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigai Dam"

    • பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    கூடலூர்:

    தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

    தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி முடிந்ததால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு 711 கன அடியில் இருந்து இன்று 105 கன அடியாக குறைக்கப்பட்டது.


    பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 83 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.35 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 417 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1202 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 69 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி என 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1034 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிற நிலையில் 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.90 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.16 அடியாக உள்ளது. 18.55 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

    இங்கு வாரம் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது தவிர விடுமுறை நாட்களில் அதிக அளவு நபர்கள் வருகை தருவதுண்டு.

    இன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் வைகை அணை பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுழைவு வாயில் முன்பு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து திருமணம் செய்து வைக்கப்போவதாக பல்வேறு அமைப்புகள் தயார் நிலையில் இருந்தன.

    மேலும் காதல் ஜோடிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவர்கள் அறிவித்திருந்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு வந்தவர்களை தொடர்ந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சந்தோஷமாக பொழுதை கழிக்க வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல தேனி மாவட்டத்தின் மற்றொரு சுற்றுலா தலமாக குரங்கணி பகுதி உள்ளது. அங்கும் காதல் ஜோடிகள் குவியத் தொடங்கியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காதலர்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. நீர் வரத்து 437 கனஅடி. நேற்று வரை 1500 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 500 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5469 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்பட்டு 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது. வரத்து 1251 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 5513 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடி. வரத்து 29 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 403 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 29 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது.
    • வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 70 அடிக்கு மேல் எட்டியது. அதன் பிறகு கடந்த 6-ந் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதால் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது. இருந்த போதும் வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.10 அடியாக உள்ளது. வரத்து 910 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5873 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.70 அடியாக உள்ளது. வரத்து 134 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6294 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.75 அடி. வரத்து 21 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 430.23 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 25 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 803 கனஅடியாக குறைந்துளளது.

    இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக குறைந்துள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 280 கனஅடியாக சரிந்துள்ளது. இருந்தபோதும் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 37.14 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    • நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர், அரசரடி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 3-வது முறையாக அணையின்நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர்முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று பகல்பொழுதில் திடீரென கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து 5224 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவில் நீடிப்பதால் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 5-வது நாளாக 71 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே நீர்வரத்து மற்றும் இருப்பு அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. அணைக்கு 1702 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து நீர்திறப்பு இன்று காலை நிறுத்தப்பட்டது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு 281 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்தது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. முல்லைப்பெரியாறு, வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்பட அனைத்து நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்தநிலையில் அடுத்த சில நாட்களுக்கு தேனி மாவட்டம் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்று மாலை முதல் மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வைகை அணை நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம், கூடலூர், கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2233 கனஅடிநீர் வந்தது. நீர்மட்டமும் 69.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டும்போது தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

    எனவே அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஆற்றைக்கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1499 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது.ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1284 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 73.54 கனஅடியாகும்.

    பெரியாறு 49, தேக்கடி 71.2, கூடலூர் 7.6, உத்தமபாளையம் 12.6, சண்முகாநதி அணை 14.2, போடி 3, வைகை அணை 0.4 , மஞ்சளாறு 9 , சோத்துப்பாறை 17, பெரியகுளம் 12, வீரபாண்டி 9.6, அரண்மனைப்புதூர் 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை கடந்த மாதம் 10-ந்தேதி 70 அடியை எட்டியது. இதனைதொடர்ந்து 11-ந்தேதி முதல் 14-ம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் வடகிழக்குபருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் இந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியது.

    இதனையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசனபகுதி 3-க்கும் 1004 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வைகையாற்றின் வழியாக நேற்று காலை முதல் விநாடிக்கு 800 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கனஅடியாக திறக்கப்பட்டது. அணையிலிருக்கும் தண்ணீரை பொறுத்து கிருதுமால் நதிக்கு 10 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் விநாடிக்கு 150 கனஅடிவீதம் 300 மி.கனஅடி தண்ணீர் 58-ம் கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 2284.86 ஏக்கர் நிலங்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.90 அடியாக உள்ளது. வரத்து 2190 கனஅடி, திறப்பு 1999 கனஅடி, இருப்பு 5728 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டிவிடும் நிலையில் உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது. ஏற்கனவே இடுக்கி மாவட்டத்தில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்., அணைக்கு நீர்வரத்து 1715 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 7342 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழை குறைந்துள்ளபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 5-ம் நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை ஏற்கனவே நிரம்பி முழு கொள்ளளவை எட்டி விட்டது.
    • சோத்துப்பாறை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.73 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 681 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏற்கனவே அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை நெருங்கியதில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.09 அடியாக உள்ளது. அணைக்கு 12955 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று மதியம் அல்லது மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் மதகுகள் வழியாகவும், கால்வாய் வழியாகவும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை ஏற்கனவே நிரம்பி முழு கொள்ளளவை எட்டி விட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 56.30 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 345 கன அடி முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.73 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 681 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகமலை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகாநதி அணையும் முழு கொள்ளளவை எட்டி விட்டதால் அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு 3.4, தேக்கடி 9.4, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அணை 23, போடி 7.6, வைகை அணை 11, மஞ்சளாறு 11, சோத்துப்பாறை 19, பெரியகுளம் 13, வீரபாண்டி 7, அரண்மனைப்புதூர் 8.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×