செய்திகள்
மாயம்

மேலூர் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2019-12-12 11:59 GMT   |   Update On 2019-12-12 11:59 GMT
மேலூர் அருகே 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

மேலூர் அருகே உள்ள தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவரது மனைவி பாண்டியம்மாள் (25). இவர்களுக்கு கவிபிரியா, நந்தினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் செல்வகுமார் வேலை பார்த்து வருகிறார். இதனால் பாண்டியம்மாள், குழந்தைகளுடன் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று மாமனார், மாமியார் வயலுக்கு சென்றிருந்த நேரத்தில் பாண்டியம்மாள், குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் அவர் குழந்தைகளுடன் திடீரென மாயமாகி விட்டார்.

இது குறித்து திருப்பூரில் உள்ள செல்வகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பல இடங்களில் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான பாண்டியம்மாளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News