செய்திகள்
மதுரையில் அரசு பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பலி
மதுரையில் அரசு பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார்.விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கே.புதூர் விநாயகர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுதர்சன் (வயது 17) . 3 மாவடி சந்தானம் நகரைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் சிவசங்கரன் (17). இவர்கள் இருவரும் பிளஸ்-2 மாணவர்கள்.
நேற்று சுதர்சனும், சிவசங்கரனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். புது ஜெயில்ரோடு பாலத்தில் சென்றபோது அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவசங்கரன் காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கே.புதூர் விநாயகர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுதர்சன் (வயது 17) . 3 மாவடி சந்தானம் நகரைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் சிவசங்கரன் (17). இவர்கள் இருவரும் பிளஸ்-2 மாணவர்கள்.
நேற்று சுதர்சனும், சிவசங்கரனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். புது ஜெயில்ரோடு பாலத்தில் சென்றபோது அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவசங்கரன் காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.