செய்திகள்
களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்- பெண் மீது வழக்கு
களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்கு எருக்கலைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி கற்பகராஜ் (வயது 60. மாற்றுத்திறனாளியான இவருக்கும், இவரது சகோதரர் அதே தெருவை சேர்ந்த விக்டருக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று கற்பகராஜ் வயலுக்கு சென்ற போது விக்டரின் மனைவி ஸ்டெல்லா அவரை வழிமறித்து அவதூறாக பேசியதுடன், அவரை கீழே தள்ளி, தலையில் கற்களால் தாக்கினார். மேலும் வயலுக்கு சென்றால் கொலை செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டெல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே உள்ள வடக்கு எருக்கலைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி கற்பகராஜ் (வயது 60. மாற்றுத்திறனாளியான இவருக்கும், இவரது சகோதரர் அதே தெருவை சேர்ந்த விக்டருக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று கற்பகராஜ் வயலுக்கு சென்ற போது விக்டரின் மனைவி ஸ்டெல்லா அவரை வழிமறித்து அவதூறாக பேசியதுடன், அவரை கீழே தள்ளி, தலையில் கற்களால் தாக்கினார். மேலும் வயலுக்கு சென்றால் கொலை செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டெல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.