செய்திகள்
திருமங்கலம் அருகே விபத்து- கொரியர் நிறுவன தொழிலாளி பலி
திருமங்கலம் அருகே லாரி மோதிய விபத்தில் கொரிய நிறுவன தொழிலாளி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 30). இவர் கூத்தியார்குண்டுவில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கார்த்திக் வழக்கமாக அதிகாலையில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 1 மணிக்கு கார்த்திக் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
கூத்தியார்குண்டு 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த ஆஸ்டின் பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 30). இவர் கூத்தியார்குண்டுவில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கார்த்திக் வழக்கமாக அதிகாலையில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 1 மணிக்கு கார்த்திக் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
கூத்தியார்குண்டு 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த ஆஸ்டின் பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.