செய்திகள்
கோப்பு படம்

லஞ்சப்புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் இடமாற்றம்

Published On 2019-12-05 08:08 GMT   |   Update On 2019-12-05 08:08 GMT
லஞ்ச புகாரில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்பட 5 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜசேகர்.

இங்கு போலீஸ்காரர்களாக அசோக்குமார், சன்னி லாயிடு உள்ளனர். இவர்கள் மீது லஞ்சப்புகார் எழுந்தது.

வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வருபவர்களிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் லஞ்ச புகாரில் சிக்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், போலீஸ்காரர்கள் அசோக் குமார், சன்னிலாயிடு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜசேகர் வேலூருக்கும், அசோக்குமார், சன்னிலாயிடு திருவண்ணாமலைக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும், பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும் எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News