செய்திகள்
கயத்தாறு அருகே மினி டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
கயத்தாறு அருகே மினி டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கிருஷ்ணகுமார் (27), மினி டேங்கர் லாரி டிரைவராக இருந்தார். இவர் மினி டேங்கர் லாரி மூலம் அப்பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை மினி டேங்கர் லாரியில் அகிலாண்டபுரம் அருகே வரும்போது மினி டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான கிருஷ்ணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கிருஷ்ணகுமார் (27), மினி டேங்கர் லாரி டிரைவராக இருந்தார். இவர் மினி டேங்கர் லாரி மூலம் அப்பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை மினி டேங்கர் லாரியில் அகிலாண்டபுரம் அருகே வரும்போது மினி டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான கிருஷ்ணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.