செய்திகள்
தாராபுரத்தில் வேகமாக பரவும் விஷக்காய்ச்சல் - மாணவனுக்கு டெங்கு பாதிப்பு
தாராபுரத்தில் விஷக்காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை தூறல், வெயில் என மாறி மாறி சீதோஷ்ண நிலை இருந்து வருகிறது. மேலும் காலையில் கடும் பனி நிலவுகிறது. இதனால் தாராபுரம் பகுதியில் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது.
இதற்கு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தாராபுரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு தினமும் 300 பேருக்கு மேல் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
தாராபுரம் செட்டியார் புதூரை சேர்ந்த பள்ளி மாணவன் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஷக்காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தாராபுரத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை தூறல், வெயில் என மாறி மாறி சீதோஷ்ண நிலை இருந்து வருகிறது. மேலும் காலையில் கடும் பனி நிலவுகிறது. இதனால் தாராபுரம் பகுதியில் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது.
இதற்கு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தாராபுரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு தினமும் 300 பேருக்கு மேல் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
தாராபுரம் செட்டியார் புதூரை சேர்ந்த பள்ளி மாணவன் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஷக்காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தாராபுரத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.