செய்திகள்
தற்கொலை

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-11-24 12:52 GMT   |   Update On 2019-11-24 12:52 GMT
கோவையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை ஆவாரம் பாளையம் அருகே உள்ள காமதேனு நகரை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி கவுசல்யா (வயது 39). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். 

இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நிலை சீராகவில்லை. இதன் காரணமாக கவுசல்யாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட கவுசல்யாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News