செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

அருப்புக்கோட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2019-11-23 07:01 GMT   |   Update On 2019-11-23 07:01 GMT
அருப்புக்கோட்டை அருகே மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உதவியாக செயல்பட்ட வாலிபர், லாரி மோதியதில் பலியானார்.
விருதுநகர்:

விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அமர்நாத். இவர் அருப்புக்கோட்டை பகுதிக்கும் கூடுதல் பொறுப்பாளராக உள்ளார்.

நேற்று இரவு அருப்புக்கோட்டை-பந்தல்குடி பகுதியில் அமர்நாத் வாகன சோதனை நடத்தினார். அவருக்கு உதவியாக சாத்தூர் ஓடைப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 29) செயல்பட்டார்.

அவர் ஒரு வாகனத்தை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்த கரிமூடை லாரி அந்த வாகனத்தின் மீது மோதியது.

இதனால் முன்னுக்கு தள்ளப்பட்ட வாகனம், மாரிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவர் ஸ்ரீகுமார் (27) என்பவரை கைது செய்தனர். இவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
Tags:    

Similar News