பொன்னேரி, நவ. 22-
பொன்னேரியை அடுத்த கொக்குமேடு பகுதியை சேர்ந்தவர் கமலா.
இவர் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இது போல் அருகில் உள்ள குரும்பத்தூரில் புஷ்பா என்பவருடைய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த 2 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
பொன்னேரியை அடுத்த தசரத நகரை சேர்ந்தவர் காளமேகம் வக்கீல். நள்ளிரவு இவருடைய வீட்டின் பூட்டை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்தார். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபோல், பரமேஸ்வரன் என்ற வக்கீல் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்தது. சத்தம் கேட்டு அங்கு வருவதற்குள் கொள்ளையர் கள் தப்பி விட்டனர்.
தொடர் கொள்ளை காரணமாக இந்த பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.