செய்திகள்
தண்ணீரில் மூழ்கி பலி

திருவையாறு அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2019-11-21 13:33 GMT   |   Update On 2019-11-21 13:33 GMT
திருவையாறு அருகே குட்டையில் இறங்கிய வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த வளப்பக்குடி கீழத்தெருவை சேர்ந்த தனபால் மகன் விஜய் (வயது22). இவருக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் ஊர் அருகே உள்ள வடிகால் குட்டையில் இறங்கும்போது வலிப்பு வந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

இது பற்றிய புகாரின் பேரில் மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் விஜயின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News