செய்திகள்
விபத்து

தஞ்சையில் வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2019-11-19 11:40 GMT   |   Update On 2019-11-19 11:40 GMT
தஞ்சையில் வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நாகத்தி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 59). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

தஞ்சை பள்ளியக்ரஹாரம் புறவழிச் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்பழகன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து விசாரணைப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News