செய்திகள்
கோவை நுகர்வோர் கோர்ட்

ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு - கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-11-19 09:20 GMT   |   Update On 2019-11-19 09:20 GMT
வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்காத கோவை ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பாலசந்திரன் உத்தரவிட்டார்.
கோவை:

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் 2014-ம் ஆண்டு ஆவின் வாடிக்கையாளர் அட்டையினை பணம் கொடுத்து வாங்கினார். ஆனால் அவரது பெயர் ஆவின் சாவடியில் இல்லை. இதனைதொடர்ந்து சேவை குறைபாடு எனக்கூறி அன்பழகன் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜூலை 17-ந்தேதி அன்பழகனுக்கு 5 ஆயிரம் நிவாரண தொகை, வழக்கு செலவுக்கான தொகை ரூ.3 ஆயிரத்தை வழங்கிட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை ஆவின் நிர்வாகம் தீர்ப்பின்படி அன்பழகனுக்கு நஷ்டஈடு வழங்கவில்லை. இதுதொடர்பாக அன்பழகன் மீண்டும் நுகர்கோர் கோர்ட்டில் முறையிட்டார்.

கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பாலசந்திரன் கோவை ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News