செய்திகள்
கைது

நெற்குன்றத்தில் வியாபாரியை வெட்டி பணம் பறிப்பு - 2 வாலிபர்கள் கைது

Published On 2019-11-13 06:11 GMT   |   Update On 2019-11-13 06:11 GMT
நெற்குன்றத்தில் வியாபாரியை வெட்டி செல்போன்-பணம் பறிப்பு சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிஜி நந்தன். இவர் நெற்குன்றம் மெட்ரோ டேம் பகுதியில் தங்கி பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 8-ந் தேதி அவர் மதுரவாயல் தனலட்சுமி நகர் 7-வது தெருவில் ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பிஜி நந்தனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர்.

பணம் கொடுக்க மறுத்த பிஜி நந்தனை மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அவரது பையில் இருந்த ரூ830 பணம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இடது கை, கால்களில் வெட்டு காயமடைந்த பிஜி நந்தன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நெற்குன்றத்தைச் சேர்ந்த மதன், கோபாலகிருஷ்ணன் என்கிற தீனா ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News