செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சரிவு- ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்திற்கு கீழே இறங்கியது

Published On 2019-11-12 11:25 GMT   |   Update On 2019-11-12 11:25 GMT
தங்கம் விலை இன்று ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே இறங்கியது. சென்னையில் இன்று பிற்பகல் ஒரு சவரன் 28,944 ரூபாயாக இருந்தது.
சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்தியாவில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து செப்டம்பர் மாதம் ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. 29 ஆயிரத்திற்கு கீழே இறங்கவில்லை.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.29,088 என்ற நிலையில் இருந்தது. கிராம் 3636 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. ஒரு சவரன் 29 ஆயிரத்திற்கு கீழே இறங்கியது. சென்னையில் இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து 3,618 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 28,944 ரூபாயாக இருந்தது. 

இதேபோல் சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.47.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,500 ஆகவும் உள்ளது. 
Tags:    

Similar News