செய்திகள்
தாக்குதல்

செல்போனில் கேம் விளையாடிய போது தகராறு- கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

Published On 2019-11-12 10:11 GMT   |   Update On 2019-11-12 10:11 GMT
செல்போனில் கேம் விளையாடிய போது தகராறில் கல்லூரி மாணவர் மீது தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்காநல்லூர்:

கோவை ராமநாதபுரம் அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் லாரன்ஸ்.

இவரது மகன் ஆண்டனி திலிப் (19). இவர் கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர்கள் அன்பு செல்வன் என்கிற ராபர்ட் துரை (22), கார்த்திக் (22). இவர்கள் 3 பேரும் செல்போனில் கேம் விளையாடி கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த அன்பு செல்வன், கார்த்திக் ஆகியோர் கல்லால் ஆண்டனி திலிப்பை தாக்கினார்கள். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஞான சேகர் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவரை தாக்கிய அன்பு செல்வன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தார்.

Tags:    

Similar News