செய்திகள்
செல்போன் பறிப்பு

சாலி கிராமம் அருகே என்ஜினீயரை தாக்கி செல்போன் பறிப்பு

Published On 2019-11-12 08:36 GMT   |   Update On 2019-11-12 08:36 GMT
சாலி கிராமம் அருகே என்ஜினீயரை தாக்கி செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சாலி கிராமம் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் சந்தீப். சாப்ட்வேர் என்ஜினீயர். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சந்தீப் வீட்டின் அருகில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் சந்தீப் முதுகில் ஓங்கி அடித்து சந்தீப்பிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News