செய்திகள்
ஜாம்பஜாரில் செல்போன் பறித்த 2 பேர் கைது
ஜாம்பஜாரில் செல்போன் பறித்த 2 பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் பெரிய தெருவில் வசித்து வருபவர் அடைகன் திருச்சியை சேர்ந்த இவர் இங்கு தங்கி இருந்து கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஜாம்பஜார் செல்ல பிள்ளையார் கோவில் தெருவில் செல்போனில் பேசிக் கொண்டே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ராயப்பேட்டையை சேர்ந்த முகமது, ஜஸ்அவுசை சேர்ந்த இம்ரான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.