செய்திகள்
போடி அருகே ஆற்றில் மணல் கடத்திய 5 பேர் கைது
போடி அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள முத்தையதேவன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவர்கள் 2 பேரும் டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி கடத்தி வந்தனர். தாலுகா போலீசார் அவர்களை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதே போல் கொட்டக்குடி ஆற்று படுகையில் இருந்து பைக்குகளில் மணல் திருடி வந்த செந்தில்குமார் (36), சுப்புராஜ் மணி (48), பாலுசெல்வம் (38) ஆகியோரை போடி டவுன் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர் மழை பெய்து வருவதால் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எஎவே போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி அக்கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.