செய்திகள்
திண்டுக்கல் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துக் குமார். இவர் திருச்சிக்கு 4 வழிச்சாலையில் கார்மூலம் சென்று கொண்டிருந்தார். அய்யலூர் அருகே வண்டிகருப்பணசாமி கோவில் பகுதியில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.
இதில் பைக்கில் வந்த நைனான்குளத்துப்பட்டியை சேர்ந்த தமிழன் (வயது27), கதிர்மணி (36) ஆகியோர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் புத்தாநத்தம் பிரிவு பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டன. இதில் பழனியப்பன், ராஜேந்திரன், மதன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகன்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.