செய்திகள்
கைது

ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது

Published On 2019-10-26 09:05 GMT   |   Update On 2019-10-26 09:05 GMT
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொத்தபட்டியை சேர்ந்த சிவக்குமார் மனைவி ஈஸ்வரி (வயது20). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் மும்மூர்த்தி மனைவி மாரீஸ்வரி (24). இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். சம்பவத்தன்று ஈஸ்வரி தனது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க செயின் திருடு போனது. இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும்.

நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ சாவி வைக்கும் இடம் மாரீஸ்வரிக்கு மட்டுமே தெரியும் என்பதால்அவர் மீது சந்தேகம் எழுந்தது.

இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாரீஸ்வரி நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News