செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை
கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந்தேதி உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கந்த சஷ்டி திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2.11.2019 அன்று நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், சுகாதார துறை, மின்வாரியம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக வருகிற 14.12.2019 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கந்த சஷ்டி திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2.11.2019 அன்று நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், சுகாதார துறை, மின்வாரியம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக வருகிற 14.12.2019 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.