செய்திகள்
மரணம்

கோவையில் பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து மரணம்

Published On 2019-10-22 11:34 GMT   |   Update On 2019-10-22 11:34 GMT
கோவையில் இன்று காலை பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

வால்பாறையை சேர்ந்தவர் ஸ்மைல் (வயது 35). இவர் கோவை ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக இருந்தார். இவரது கணவர் பிரபு (40). இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். கோவை அவினாசி ரோடு போலீஸ் குடியிருப்பில் தங்கி ஸ்மைல் வேலைக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். வீட்டின் முன்பு திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News