செய்திகள்
மழை (கோப்புப்படம்)

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

Published On 2019-10-21 11:26 GMT   |   Update On 2019-10-21 11:26 GMT
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:

சேலல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆனைமடுவு, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம், ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆனைமடுவு- 24, தம்மம்பட்டி - 20, பெத்தநாயக்கன் பாளையம் -17, வாழப்பாடி - 13, ஏற்காடு-12.4, காடையாம்பட்டி-10, எடப்பாடி-12, சங்ககிரி -10, கரியகோவில் - 6, வீரகனூர், கெங்கவல்லி-4, ஆத்தூர்-2.4. சேலம்-2.2, மேட்டூர் 1.8 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 141 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
Tags:    

Similar News