செய்திகள்
கைது

அழகர்கோவில் மலைக்கு காதலனுடன் சென்ற சிறுமி பலாத்காரம்

Published On 2019-10-21 10:27 GMT   |   Update On 2019-10-21 10:27 GMT
காதலனுடன் கோவிலுக்கு சென்ற 15 வயது சிறுமியை வனஅதிகாரி என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை அருகே உள்ள பொன் நகரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது காதலன் சரவணனுடன் அழகர்கோவில் ஒத்தையடி பாதை வழியாக முருகன் கோவிலுக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் தன்னை வன அதிகாரி என்று கூறிக்கொண்டு சரவணனை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மேலூர் பகுதியைச் சேர்ந்த நட்சன் (வயது 29) என்பதும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த செல்போனை பறித்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் நட்சனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Tags:    

Similar News