செய்திகள்
தஞ்சையில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை-சொகுசு கார் திருட்டு
தஞ்சையில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை, சொகுசு கார் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 61). ஓய்வு பெற்ற டாக்டர். இவரது மனைவி சாந்தி. இவர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் தர்ஷனா சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று முருகவேல் தனது மனைவி சாந்தியை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு ஒரு வாடகை காரில் சென்னையில் படிக்கும் தனது மகளை பார்க்க சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளி மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்தக் காரையும் திருடி கொள்ளையடித்த நகைகள், பணத்தோடு தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்த முருகவேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 61). ஓய்வு பெற்ற டாக்டர். இவரது மனைவி சாந்தி. இவர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் தர்ஷனா சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று முருகவேல் தனது மனைவி சாந்தியை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு ஒரு வாடகை காரில் சென்னையில் படிக்கும் தனது மகளை பார்க்க சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளி மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்தக் காரையும் திருடி கொள்ளையடித்த நகைகள், பணத்தோடு தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்த முருகவேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.