செய்திகள்
தற்கொலை

தென்தாமரைகுளம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2019-10-12 11:47 GMT   |   Update On 2019-10-12 11:47 GMT
தென்தாமரைகுளம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளத்தை அடுத்த சித்தன் குடியிருப்பைச் சேர்ந்தவர் குமரேசன்(வயது50). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

குமரேசன் குடித்து விட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். குடியை மறப்பதற்கு இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் குடிக்க ஆரம்பித்தார். இதனை அவரது மகன் கண்டித்துள்ளார். இதில் மன வேதனையுடன் காணப்பட்டு வந்த அவர் வீட்டில் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நித்திரவிளையை அடுத்த மாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் மெஜாஸ்டின்(வயது32). தொழிலாளி. இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். இதில் மன வருத்தத்துடன் மெஜாஸ் டின் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் மெஜாஸ்டின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News