செய்திகள்
கைது

விவசாயிக்கு கத்திக்குத்து - 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

Published On 2019-10-11 09:51 GMT   |   Update On 2019-10-11 09:51 GMT
விவசாயியை கத்தியால் குத்தியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

உசிலம்பட்டியை அடுத்த கருக்காபிள்ளையைச் சேர்ந்தவர் உத்தாயசாமி (வயது 55), விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர்கள் சிலருக்கும் இடையில் பூர்வீக மனை பாகப்பிரிவினை தொடர்பாக முன் விரோதம் உள்ளது.

இந்த நிலையில உத்தாய சாமி விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்தார். அப்போது பூம்பாண்டி (47) மற்றும் அவரது மனைவி விஜயபாண்டி அம்மாள் ஆகிய 2 பேரும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் உத்தாயசாமிக்கு உருட்டுக்கட்டை அடியுடன் கத்திக்குத்தும் விழுந்தது.

இது தொடர்பாக உத்தாயசாமி வாலாந்தூர் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து பூம்பாண்டி, ஜெயபாண்டி அம்மாளை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இதே வழக்கில் பூம்பாண்டி புகாரின் பேரில் உத்தாயசாமி மனைவி பிரபா (38) மற்றும் உறவினர் நாகராஜன் (49) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News