செய்திகள்
கோப்பு படம்

மருத்துவ கல்லூரிக்கு சென்ற காதல் மனைவியை தாய் கடத்தியதாக கணவன் போலீசில் புகார்

Published On 2019-10-05 10:26 GMT   |   Update On 2019-10-05 10:26 GMT
வில்லியனூர் அருகே மருத்துவ கல்லூரிக்கு சென்ற காதல் மனைவியை அவரது தாய் கடத்தி சென்று விட்டதாக கணவன் போலீசில் புகார் செய்துள்ளார்.
வில்லியனூர்:

மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த ஜான்சன் (வயது27). மதபோதகர். இவர் அதே பகுதியை சேர்ந்த அரியூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் ரூபாவதி (21) என்பவரை கடந்த 7½ மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலை தனது மனைவி ரூபாவதியை மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் ரூபாவதியை வீட்டுக்கு அழைத்து செல்ல மருத்துவ கல்லூரிக்கு வந்த போது அங்கு ரூபாவதி இல்லை. பல இடங்களில் தேடியும் ரூபாவதி இல்லை.

இதையடுத்து ஜான்சன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மனைவி ரூபாவதியை அவரது தாய் சித்ரா கடத்தி சென்று விட்டதாக கூறினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிக்காசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News