செய்திகள்
பெண் பிணம்

அதிராம்பட்டினத்தில் அடையாளம் தெரியாத பெண் பிணம்

Published On 2019-10-03 14:12 GMT   |   Update On 2019-10-03 14:12 GMT
அதிராம்பட்டினத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் கிழக்குக் கடற்கரைச் காலையிலிருந்து கீழத்தோட்டம் கிராமத்திற்கு செல்லும் வழியில் புறா குளம் உள்ளது. 

அந்த குளத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராஜா மடம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

அதன்பேரில் அதிராம்பட்டினம் போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பிண கிடங்கில் வைத்துள்ளனர். 
இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் இந்த பெண் யார்? என்பது பற்றி விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News