search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத பெண் பிணம்"

    தா.பேட்டை அருகே கோம்பை ஆற்று வாரியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அருகே மங்களம் கிராமத்தில் உள்ள ருத்திராட்சை கோம்பை ஆற்று வாரியில் சுமார் 65 வயது மதிக்கதக்க பெண் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் விஏஓ ரேவதிக்கு தகவல் தெரிவித்தனர்.  

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சென்று அடையாளம் தெரியாத அந்த பெண் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்துகிடந்தவர் யா? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×