search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unidentified female corpse"

    ஈச்சம்பாடி அருகே 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மொரப்பூர்:

    தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பாடி தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மிதந்து கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் உடனே தெரியவில்லை.

    இறந்தவர் யார்? எந்தை ஊரைச் சேர்ந்தவர் என்றும், யாராவது அந்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தா.பேட்டை அருகே கோம்பை ஆற்று வாரியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அருகே மங்களம் கிராமத்தில் உள்ள ருத்திராட்சை கோம்பை ஆற்று வாரியில் சுமார் 65 வயது மதிக்கதக்க பெண் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் விஏஓ ரேவதிக்கு தகவல் தெரிவித்தனர்.  

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சென்று அடையாளம் தெரியாத அந்த பெண் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்துகிடந்தவர் யா? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×