search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈச்சம்பாடி அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம்
    X

    ஈச்சம்பாடி அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம்

    ஈச்சம்பாடி அருகே 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மொரப்பூர்:

    தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பாடி தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மிதந்து கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் உடனே தெரியவில்லை.

    இறந்தவர் யார்? எந்தை ஊரைச் சேர்ந்தவர் என்றும், யாராவது அந்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×