செய்திகள்
தற்கொலை

திருக்கனூர் அருகே முதியவர் தற்கொலை

Published On 2019-10-01 09:41 GMT   |   Update On 2019-10-01 09:41 GMT
திருக்கனூர் அருகே மஞ்சள் காமாலை நோயால் அவதி அடைந்து வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 82). இவர் வயது முதிர்ச்சி காரணமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே நடராஜனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.

இதனால் நடராஜன் விரும்பிய உணவை சாப்பிட முடியாமலும், மஞ்சள் காமாலை நோயாலும் அவதி அடைந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நடராஜனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News