செய்திகள்
மகன் ஜெயிலுக்கு சென்ற வேதனையில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
தேங்காய்திட்டில் மகன் ஜெயிலுக்கு சென்ற வேதனையில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு காளியம்மன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சின்னவன். ஆட்டோ டிரைவர். இவருடன் அவரது தாய் சீதா (வயது 79) வசித்து வந்தார்.
இதற்கிடையே சின்னவனை பெரியகடை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மகன் சிறையில் அடைக்கப்பட்டதால் சீதா சரியாக சாப்பிடாமல் மனவருத்தத்தில் இருந்து வந்தார். உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்தும் சீதா சோகத்துடன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சீதா நேற்று அங்குள்ள புத்துக்கோவில் அருகே பூவரச மரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது பேரன் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் ஜெயிலுக்கு சென்ற வேதனையில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை தேங்காய்திட்டு காளியம்மன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சின்னவன். ஆட்டோ டிரைவர். இவருடன் அவரது தாய் சீதா (வயது 79) வசித்து வந்தார்.
இதற்கிடையே சின்னவனை பெரியகடை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மகன் சிறையில் அடைக்கப்பட்டதால் சீதா சரியாக சாப்பிடாமல் மனவருத்தத்தில் இருந்து வந்தார். உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்தும் சீதா சோகத்துடன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சீதா நேற்று அங்குள்ள புத்துக்கோவில் அருகே பூவரச மரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது பேரன் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் ஜெயிலுக்கு சென்ற வேதனையில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.