செய்திகள்
கொள்ளை

ஓட்டேரியில் வியாபாரி வீட்டில் 40 பவுன் நகை- பணம் கொள்ளை

Published On 2019-09-26 08:26 GMT   |   Update On 2019-09-26 08:26 GMT
ஓட்டேரியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ. 2½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பெரம்பூர்:

ஓட்டேரி ஜமாலியா அருகில் உள்ள சாந்தி காலனியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் இரும்பு, மர வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 19-ந்தேதி சாகுல் அமீது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான நெல்லை சென்றார். நேற்று இரவு 8 மணி அளவில் சென்னை திரும்பினார்.

சாந்தி நகரில் உள்ள வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து சாகுல்அமீது போலீசில் புகார் செய்தார்.

ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். நகை, பணத்துடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Tags:    

Similar News