செய்திகள்
புதுச்சேரி

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் - 2 நாளிலும் வேட்புமனு தாக்கல் இல்லை

Published On 2019-09-24 09:41 GMT   |   Update On 2019-09-24 09:41 GMT
புதுவை காமராஜ் நகர் தொகுதியில் முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று 2-வது நாளிலும் மதியம் ஒரு மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
புதுச்சேரி:

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந்தேதி நடக்கிறது.

வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. உப்பளம் கோலாஸ்நகரில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முகமதுமன்சூரிடம் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று 2-வது நாளிலும் மதியம் ஒரு மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் யார்? என முடிவு செய்யவில்லை என்பதால் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பின்னரே இடைத்தேர்தல் சூடுபிடிக்கும்.

Tags:    

Similar News