செய்திகள்
கே.கே.நகரில் வழிப்பறி - கொள்ளையன் கைது
கே.கே.நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை, கே.கே. நகர் ராஜ மன்னார் சாலையில் நேற்று முன்தினம்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேசன் என்பவரை மர்ம நபர்கள் மிரட்டி, அவரது பைக், செல்போன், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் அதில் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் பல்சர் பாபு மற்றும் அவரது சகோதரர் ஹரிதாஸ் இரு வரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. ஹரிதாஸை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. பல்சர் பாபுவை பிடிக்க போலீசார் தீவிர நவடிக்கை எடுத்து வருகின்றனர்.