செய்திகள்
கொள்ளை

கள்ளிக்குடியில் ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-09-23 11:41 GMT   |   Update On 2019-09-23 11:41 GMT
கள்ளிக்குடியில் ராணுவ வீரர் வீட்டில் புகுந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு (வயது 33). ராணுவ வீரரான இவர் ஹைதராபாத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சண்முக பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 17-ந் தேதி கணவரை பார்ப்பதற்காக சண்முகபிரியா தனது குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு ஹைதரா பாத்துக்கு சென்று விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

மறுநாள் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே சண்முகபிரியாவின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது நகை, பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை- பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News