செய்திகள்
தேனி அருகே கணவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மனைவி தற்கொலை
தேனி அருகே கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே கோம்பை பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி நாகம்மாள் (வயது 60). ராஜூ கடந்த சில நாட்களாக காச நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். சின்னமனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.
இதனால் மனவருத்தத்தில் இருந்த நாகம்மாள் அரளி விதையை அரைத்து தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகம்மாள் உயிரிழந்து விட்டார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.