செய்திகள்
ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும்- சுற்றுலா பயணிகள் கோரிக்கை
நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒகேனக்கல்:
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 12 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
மெயின் அருவியில் தண்ணீர் குறைந்து உள்ளது. ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் இன்று 15-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று 44-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.
நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் தடுப்பு கம்பிகளை சீரமைத்து மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 12 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
மெயின் அருவியில் தண்ணீர் குறைந்து உள்ளது. ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் இன்று 15-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று 44-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.
நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் தடுப்பு கம்பிகளை சீரமைத்து மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.