செய்திகள்
திருமங்கலம் அருகே மினிவேன் மோதி விபத்து- தொழிலாளி பலி
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்- மினிவேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். அவரது தந்தை படுகாயமடைந்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பச்சகோப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அம்மாவாசி (வயது 70). இவரது மகன் செல்வம் (52), கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று செல்வம் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் திரளியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.
திரளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அம்மாவாசி, செல்வம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வத்தின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பச்சகோப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அம்மாவாசி (வயது 70). இவரது மகன் செல்வம் (52), கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று செல்வம் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் திரளியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.
திரளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அம்மாவாசி, செல்வம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வத்தின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.