செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் கொள்ளை

Published On 2019-09-20 06:35 GMT   |   Update On 2019-09-20 06:35 GMT
ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பருத்துமேனிகுப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை விவசாயி. இவரது மனைவி சுந்தரி. நேற்று ஏழுமலை வயலுக்கு சென்று விட்டார்.

சுந்தரி கிராமத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கு சென்று விட்டார். இவர் வேலைக்கு போகும் அவசரத்தில் வீட்டின் பூட்டை சரியாக போடவில்லை. இதை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

Tags:    

Similar News