செய்திகள்
துணி காய போட்டபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
கோவை அருகே துணி காய போட்டபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கஸ்தூரி (வயது27). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. சம்பவத்தன்று கஸ்தூரி வீட்டில் துணிகளை துவைத்து அங்குள்ள கம்பியில் காயப்போட்டு கொண்டிருந்தார். அப்போது அதன் அருகில் இருந்த மின்மீட்டர் மீது கம்பி உரசியது. கம்பி மீது கஸ்தூரி கை வைத்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கஸ்தூரி (வயது27). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. சம்பவத்தன்று கஸ்தூரி வீட்டில் துணிகளை துவைத்து அங்குள்ள கம்பியில் காயப்போட்டு கொண்டிருந்தார். அப்போது அதன் அருகில் இருந்த மின்மீட்டர் மீது கம்பி உரசியது. கம்பி மீது கஸ்தூரி கை வைத்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.